போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

பிகாரில் வளர்ச்சிக்காக தாமரை சின்னத்தை தேர்வு செய்யுங்கள்..

News image

உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On :4 நவம்பர் 2025, 3:21 pm IST

பிகாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியதைத் தடுக்க பாஜகவின் தாமரை சின்னத்துக்கு உங்களின் வாக்குகளை அழுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகாரில் 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 6ல் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 11-ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தர்பங்கா, மோதிஹாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது,

பிகாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பொத்தானை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோஷி நதி நீலை நீர்ப்பாசனத்திற்காகவும், வெள்ளத்தைத் தடுக்கவும் அரசு ரூ. 26 ஆயிரம் கோடி செலவிடும் என்று உறுதியளித்தார்.

நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் நீங்கள் தவறு செய்தால் பிகாரில் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை மீண்டும் வழக்கமாகிவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், மிதிலா, கோஷி, திருஹட்டைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக பாட்னா அல்லது தில்லிக்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் எய்ம்ஸ்-தர்பங்காவில் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

3.60 கோடி மக்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு பெறுகிறார்கள். அதே நேரத்தில் தர்பங்காவில் உள்ள ஐடி பூங்கா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

பிகாரில் சாத் விழாவை அவமதித்தவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி பிகார் தேர்தலில் அழிக்கப்படுவார்கள்.

மாநிலத்தில் என்டிஏ ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பொறியியல், ஒரு மருத்துவக் கல்லூரி கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Summary

Home Minister Amit Shah on Tuesday urged voters in Bihar to press the EVM button with the BJP's poll symbol 'lotus' to prevent the return of 'jungle raj' during the RJD rule that had "devastated" the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.