

‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தில்லியில் நவ. 7-ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் என்பது 1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றிய ஒரு கவிதை. இது 1950 ஆம் ஆண்டில் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நாடெங்கிலும் 150 இடங்களில் தேசிய பாடலைப் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லி இந்திரா காந்தி திடலில் நவ. 7-இல் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இது குறித்து, பாஜகவின் தேசிய பொதுச் செயலர் தருண் சுக் பேசும்போது, “இந்த சிறப்பான விழா (அரசமைப்பு நாள் கொண்டாட்டம்) நாடெங்கிலும் நவ. 7 முதல் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.