திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குரங்குகளுடன் குரங்காக.. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் கடும் தாக்கு!

யோகி ஆதித்யநாத்தை குரங்கு என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மறைமுகமாக விமர்சனம்

News image

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்

Updated On :5 நவம்பர் 2025, 1:34 pm IST

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குரங்கு என்று மறைமுகமாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

பிகாரில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை விமர்சித்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே காந்தியின் 3 குரங்குகள் குறித்து பாஜக கூறுகிறது.

உண்மையில், அவரை (யோகி ஆதித்யநாத்) குரங்குகளின் கூட்டத்துக்கு மத்தியில் அமர வைத்தால், அவரை நானோ நீங்களோ அடையாளம் காண முடியாது’’ என்று விமர்சித்துள்ளார்.

பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும் குரங்குகள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் பேசுகையில், ``இந்தியா கூட்டணியில் 3 குரங்குகள் உள்ளன. அவற்றில் ஒன்று பப்பு - இவரால் உண்மையையோ நல்லதையோ பேச முடியாது; இரண்டாவது தப்பு - இவரால் நல்லவற்றைக் காண முடியாது; மூன்றாவது அப்பு - இவரால் உண்மையைக் கேட்க முடியாது. இவர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சியையும் வளர்ச்சிப் பணிகளையும் காணவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

அப்பு, பப்பு, தப்பு ஆகியோர், மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி மாஃபியா ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும்தான் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

Summary

"Won't Identify If He Sat With Monkeys": Samajwadi Akhilesh Yadav Jabs UP CM Yogi Adityanath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.