புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் - பாஜக எம்.பி. கருத்து

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியதால் சர்ச்சை

News image

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

Updated On :6 நவம்பர் 2025, 7:52 pm IST

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் செவெல்லா தொகுதியின் பாஜக எம்.பி.யான கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, செய்தியாளர்களுடன் பேசுகையில் ``நல்ல சாலைகளால்தான் அதிகமான பெரிய விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

ஏனெனில், நல்ல சாலைகளில் வாகனங்கள் வேகமாகச் சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால், மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன. மெதுவாகச் செல்வதால், விபத்துகளும் குறைவாகவே நிகழ்கின்றன’’ என்று தெரிவித்தார்.

மேலும், முந்தைய பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட நல்ல சாலைகள்தான் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறினார்.

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான நிலையில், நல்ல சாலைகள்தான் காரணம் என்று விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Summary

Good roads can up accident rate: BJP MP Vishweshwar Reddy Konda

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.