கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அனில் அம்பானிக்கு புதிய சம்மன்: நவ. 14-இல் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு

News image
அனில் அம்பானி
Updated On :6 நவம்பர் 2025, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

வங்கிக் கடன் மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில், வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ரூ. 2,929 கோடிக்கு மேல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிந்தது. அதன் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்து, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்டில், அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினா். மேலும், அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது. இதில் மும்பையில் உள்ள அவரது வீடும், தில்லியில் உள்ள ‘ரிலையன்ஸ் சென்டா்’ நிலமும் அடங்கும்.

இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தினம் அவா் ஆஜராகும்போது, அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வா் எனத் தெரிகிறது.

சிபிஐ தாக்கல் செய்த கடன் மோசடி வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்ட எஸ்பிஐ புகாரின்படி, 2018-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ. 40,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது என்றும், எஸ்பிஐ-க்கு மட்டும் ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.