சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் பட்டாசு: ஃபட்னவீஸ் கேலி

ஹரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஃபட்னவீஸ் கூறுவது..

News image

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :6 நவம்பர் 2025, 1:53 pm IST

வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஹைட்ரஜன் குண்டு என்ற கருத்து வெறும் சிறிய பட்டாசாக மாறிவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கேலி செய்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ்,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.

வாக்குத் திருட்டு பற்றிய வெளிபாடுகளின் ஹைட்ரஜன குண்டு ஒன்றைத் தனது கட்சி விரைவில் வெளியிடும் என்று ராகுல் சமீபத்தில் கூறினார். அதன்படி புதன்கிழமை தில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், 2024 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் திருடப்பட்டது என்று குற்றம் சாட்டுவதற்காக தி எச்-பைல்ஸ் என்ற விளக்கக் காட்சியை வெளியிட்டார்.

25 லட்சம் பதிவுகள் போலியானவை என்றும், வெற்றியை உறுதி செய்வதற்காக தேர்தல் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக வாக்காளர் பட்டியல் தரவை மேற்கொள் காட்டினார்.

காங்கிரஸ் தலைவரின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டதற்கு, ஃபட்னவீஸ், "ராகுலின் ஹைட்ரஜன் குண்டு மிகவும் பலவீனமான குண்டு, உண்மையில் அது ஒரு சிறிய பட்டாசு என்று கேலி செய்தார்.

ராகுல் செய்வதும் அவரது நிகழ்ச்சி நிரலும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போல இருக்கின்றன என்றார்.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அவரது வீட்டை விட்டு வெளியே வராததால் விவசாயிகள் சிக்கலில் இருந்ததாகவும், தற்போது அவர் வெளியே வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்தபட்சம், இப்போதாவது மக்களிடம் செல்ல வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.