நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் பட்டாசு: ஃபட்னவீஸ் கேலி

ஹரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஃபட்னவீஸ் கூறுவது..

News image

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :6 நவம்பர் 2025, 1:53 pm IST

வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஹைட்ரஜன் குண்டு என்ற கருத்து வெறும் சிறிய பட்டாசாக மாறிவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கேலி செய்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ்,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.

வாக்குத் திருட்டு பற்றிய வெளிபாடுகளின் ஹைட்ரஜன குண்டு ஒன்றைத் தனது கட்சி விரைவில் வெளியிடும் என்று ராகுல் சமீபத்தில் கூறினார். அதன்படி புதன்கிழமை தில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், 2024 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் திருடப்பட்டது என்று குற்றம் சாட்டுவதற்காக தி எச்-பைல்ஸ் என்ற விளக்கக் காட்சியை வெளியிட்டார்.

25 லட்சம் பதிவுகள் போலியானவை என்றும், வெற்றியை உறுதி செய்வதற்காக தேர்தல் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக வாக்காளர் பட்டியல் தரவை மேற்கொள் காட்டினார்.

காங்கிரஸ் தலைவரின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டதற்கு, ஃபட்னவீஸ், "ராகுலின் ஹைட்ரஜன் குண்டு மிகவும் பலவீனமான குண்டு, உண்மையில் அது ஒரு சிறிய பட்டாசு என்று கேலி செய்தார்.

ராகுல் செய்வதும் அவரது நிகழ்ச்சி நிரலும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போல இருக்கின்றன என்றார்.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அவரது வீட்டை விட்டு வெளியே வராததால் விவசாயிகள் சிக்கலில் இருந்ததாகவும், தற்போது அவர் வெளியே வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்தபட்சம், இப்போதாவது மக்களிடம் செல்ல வேண்டும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.