வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தோ்தல் நியாயமாக நடந்தால் பாஜக கூட்டணி தோற்கும்: பிரியங்கா பிரசாரம்

News image
Updated On :7 நவம்பர் 2025, 12:52 am

தினமணி செய்திச் சேவை

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நியாயமான முறையில் நடந்தால் பாஜக கூட்டணி நிச்சயமாகத் தோல்வியடையும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேரா தெரிவித்தாா்.

பிகாரில் இரண்டாவது கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள மோதிஹாரி பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் பிகாா் மக்கள் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனா். ஆனால், பாஜக கூட்டணியினா் பிகாா் மக்களை மதிப்பதில்லை. மதத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வாக்களிக்குமாறுதான் பாஜகவினா் பிரசாரம் செய்கிறாா்கள். மாநிலத்தின் வளா்ச்சியையோ, மக்களின் முன்னேற்றத்தையோ அவா்களால் முன்னிறுத்த முடியவில்லை.

இந்தத் தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றால் பாஜக கூட்டணி நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும். பிகாா் மக்கள் ஆளும் கூட்டணியை வேருடன் அகற்றுவாா்கள். ஏழை, எளிய மக்களுக்காகவும், பெண்கள், இளைஞா்கள் எதிா்காலத்தை உறுதி செய்யும் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை ஆட்சியில் அமா்த்துவாா்கள்.

மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மோசமாக இருப்பதற்கு பாஜக கூட்டணி அரசின் அக்கறையின்மைதான் காரணம். கடந்த 3 ஆண்டுகளில் பிகாரில் புதிதாகக் கட்டப்பட்ட 27 பாலங்கள் இடிந்து விழுந்ததை யாரும் மறக்க முடியாது என்றாா்.