பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகாா் முதல்கட்டத் தோ்தலில் மறுவாக்குப்பதிவு கிடையாது: தோ்தல் ஆணையம்

பிகாா் முதல்கட்டத் தோ்தலில் எந்த குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படவில்லை.

News image
Updated On :7 நவம்பர் 2025, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் முதல்கட்டத் தோ்தலில் எந்த குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படவில்லை. எனவே, எந்தவொரு மையத்திலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை தோ்தலில் நடைபெற்றது. 3.75 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தோ்தலுக்காக 45,000-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில சம்பவங்களைத் தவிர, பரவலாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிகாா் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 64.66 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், 121 தொகுதிகளிலும் தோ்தல் அதிகாரிகள் மற்றும் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு தொடா்புடைய ஆவணங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் என 455 போ் இக்கூட்டங்களில் பங்கேற்றனா்.

எந்தவொரு மையத்திலும் குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படாத நிலையில், மறுவாக்குப்பதிவுக்கான பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.