ராஜஸ்தான்: மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய்

ராஜஸ்தானில் மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய் மின்சாரம் பாய்ந்து இறந்தது.
நாய்
நாய் கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய் மின்சாரம் பாய்ந்து இறந்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் தெரு நாயை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மின்மாற்றி மீது வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அந்த நாய் மின்சாரம் பாய்ந்த இறந்தது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற உள்ளூர்வாசிகள் மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் வருவதைக் கவனித்தனர்.

பின்னர், சுமார் 20 அடி உயரத்தில் மின்மாற்றியில் தொங்கிய நிலையில் நாயின் உடல் கண்டுள்ளனர்.

ஹாக்கியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி

தொடர்ந்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு நாயின் உடலை கீழே இறக்கி புதைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை போலீஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

An incident of animal cruelty has come to light in Jaipur's Bhankrota area where a street dog was allegedly tied up and thrown onto an electrical transformer, leading to its death by electrocution, an official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com