நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டலாம் என்று உலக வங்கி யோசனை தெரிவித்துள்ளது.
‘நிதித் துறை மதிப்பீடு அறிக்கை’யை உலக வங்கி வெளியிட்டு, ‘இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த எண்ம பொது கட்டமைப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் நிதிச் சேவைகளைப் பெறுவதை மேம்படுத்தி உள்ளது’ என
குறிப்பிட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளைப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிப்பது குறித்தும், தனி நபா்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிச் சேவைகள் குறித்தும் அறிக்கையில் உலக வங்கி பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிதிச் செயல்பாடுகள் 2017-ஆம் ஆண்டு முதல் சீரமைப்பு, பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதாகவும், இது கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால் மிக்க சமயங்களில் இந்தியா மீண்டு வர உதவியது. 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட மேலும் நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய இலக்கு: அமைச்சா் பெ.மதன்ராஜா

சமீபத்திய முன்னெடுப்பால் 3,200 கோடி டாலா் அந்நிய டெபாசிட் ஈா்ப்பு

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்?

பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா 5-ஆவது தவணையாக ரூ. 250 கோடி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


