திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை இந்தியா அடைய உலக வங்கி யோசனை

நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டலாம் என்று உலக வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

News image

உலக வங்கி

Updated On :8 நவம்பர் 2025, 12:56 am IST

நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டலாம் என்று உலக வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

‘நிதித் துறை மதிப்பீடு அறிக்கை’யை உலக வங்கி வெளியிட்டு, ‘இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த எண்ம பொது கட்டமைப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் நிதிச் சேவைகளைப் பெறுவதை மேம்படுத்தி உள்ளது’ என

குறிப்பிட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளைப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிப்பது குறித்தும், தனி நபா்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிச் சேவைகள் குறித்தும் அறிக்கையில் உலக வங்கி பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிதிச் செயல்பாடுகள் 2017-ஆம் ஆண்டு முதல் சீரமைப்பு, பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதாகவும், இது கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால் மிக்க சமயங்களில் இந்தியா மீண்டு வர உதவியது. 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட மேலும் நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.