மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கடல்சார் பொருளாதாரத்தை விரிவுபடுத்த சீர்திருத்தம்: மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கொண்டுவரும் புதிய விதிகள் அறிவிப்பு

News image

பிரதிப் படம் - ENS

Updated On :8 நவம்பர் 2025, 9:18 pm IST

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கொண்டுவரும் புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, இந்தியாவின் பரந்த கடல் வளங்களை நிலையான முறையில் கையாளப்படும் நோக்கில் 2025 - 26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைச் செயல்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தச் சீர்திருத்தமானது ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களுக்கான உரிமம் மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்தவும், நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும் செய்கிறது.

மேலும், கடலில் பெறப்படுபவையை நேரடியாகச் சந்தைப்படுத்துவதில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பங்கையும் இந்தச் சீர்திருத்தம் வலியுறுத்துகிறது. இதனால், வணிக இடைத்தரகர்களைச் சார்ந்திருத்தல் குறையும்.

நாட்டில் 20.2 லட்சம் சதுர கிலோமீட்டர் சிறப்பு பொருளாதார மண்டலம் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கையால் இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி திறன் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வள மேலாண்மையை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைப்பதன் மூலம், பொருளாதார வாய்ப்பை பாதுகாப்புத் தேவைகளுடன் சமநிலைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அரசு முயற்சிக்கிறது.

இந்த புதிய சீர்திருத்தத்தால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், மீன் ஏற்றுமதி அதிகரிக்கும், பல மாநிலங்களில் கடலோர மீன்வளத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Summary

Centre rolls out deep-sea fishing reforms to expand India’s ocean economy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.