தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

தலைநகர் தில்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது.
தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தலைநகர் தில்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய தகவலின்படி தில்லியில் சனிக்கிழமை காலை காற்றின் தரக்குறியீடு 355ஆகப் பதிவாகியிருந்தது. இது தொடா்ச்சியான மாசு அளவைக் குறிப்பதாகும். காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியுற்றனர்.

இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்ததாவது, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 28.6°C ஆக இருந்தது, இது வழக்கத்தை விட 0.9 டிகிரி குறைவாகும். தீபாவளிக்குப் பிறகு, தேசியத் தலைநகரின் காற்றின் தரம் ‘மோசம்‘ மற்றும் ‘மிகவும் மோசம்‘ வகைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அவ்வப்போது ‘கடுமை’ மண்டலத்திற்கும் சென்றது.

இதனிடையே தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை குறைக்க செயற்கை மழையை பொழியச் செய்வதற்கான சோதனை முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் நடுரோட்டில் சர்வசாதாரணமாக குற்றங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு

Summary

The national capital woke up to a smog-laden Saturday morning as the city’s average Air Quality Index (AQI) touched 335 at 9 am, placing it firmly in the ‘red zone’ and making it the most polluted city in the country, according to the Central Pollution Control Board (CPCB).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com