தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிகார் தேர்தல்: இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

இந்தியா - நேபாளம் சர்வதேச எல்லை மூடப்பட்டது பற்றி...

News image

இந்தியா - நேபாளம் எல்லை (கோப்புப்படம்)

ANI

Updated On :10 நவம்பர் 2025, 7:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்தியா - நேபாளம் இடையேயான சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு கருதி இரு நாடுகளுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்து 72 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள சர்லாஹி, மஹோத்தாரி மற்றும் ரௌதத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இந்தியா - நேபாளம் சர்வதேச எல்லை நுழைவுகள் மூடப்பட்டுள்ளன. மஹோத்தாரி மாவட்டத்தில் மட்டும் 11 நுழைவுகள் மூடப்பட்டுள்ளன.

அவசரகால சூழ்நிலைகளைத் தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிவரை முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிகார் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவ. 14 ஆம் தேதி எண்ணி, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Summary

Bihar elections: India-Nepal border closed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.