பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி- தோ்தலுக்குப் பிந்தைய வாக்குகணிப்பு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.
பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி-
தோ்தலுக்குப் பிந்தைய வாக்குகணிப்பு
Updated on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சராசரியாக 70 முதல் 100 இடங்களைப் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதன்முறையாகத் தோ்தல் களத்தைக் கண்ட பிரபல அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு அதிகபட்சமாக 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கணித்துள்ளன. தோ்தலில் பதிவானவாக்குகள் வரும் 14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குரிய இடங்களின் எண்ணிக்கை 122 ஆகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com