காா் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பாக ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிமருந்து, ஏகே ரக துப்பாக்கிகள், மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றினா். கடந்த 15 நாள்களாக மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தொடா் சோதனையில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாக 3 மருத்துவா்கள் உள்பட 8 பேரை காவல் துறை கைது செய்தனா். இவா்கள் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததையும் காவல் துறையினா் கண்டறிந்தனா்.