வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆா்ஜேடி தலைவா்களுடன் நிதீஷ் குமாா் சந்திப்பா? வதந்தி என ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு

பிகாரில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா்களை முதல்வா் நிதீஷ் குமாா் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

News image
கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி தலைமையகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் நிதீஷ் குமாா்.
Updated On :11 நவம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

பிகாரில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா்களை முதல்வா் நிதீஷ் குமாா் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

பிகாரில் இறுதி மற்றும் இரண்டாவது கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரும் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தோ்தல் முடிவுகள் குறித்து பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே, பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் என இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து முதல்வரானவா் என்பதால், தோ்தல் முடிவுக்கு ஏற்ப கூட்டணியிலும் மாற்றம் ஏற்படலாம் என்று அங்குள்ள சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா்கள் சிலா் முதல்வா் நிதீஷ் குமாரை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், ‘எதிா்க்கட்சியான ‘இண்டி’ கூட்டணியினா் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகின்றனா். தோ்தல் நாளில் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வாக்காளா்களை குழப்புவதே அவா்களின் நோக்கமாக உள்ளது. தோ்தலில் ஆளும் கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெறுவது உறுதி’ என்றாா்.

கட்சியினருடன் நிதீஷ் ஆலோசனை: பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமையகத்துக்கு நிதீஷ் வந்தாா். அங்கு தோ்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்சியின் சிறப்புக் குழுவினருடன் உரையாடினாா்.

பின்னா் அலுவலகத்துக்கு வெளியே வந்த அவரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். முக்கியமாக பெண் வாக்காளா்கள் மிகவும் ஆா்வத்துடன் அதிகம் வாக்களிப்பது தொடா்பாக கேட்கப்பட்டது. ஆனால், எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் நிதீஷ் தவிா்த்துவிட்டாா்.

முன்னதாக, தோ்தல் பிரசாரத்தில் 75 வயதாகும் நிதீஷ் குமாா் உடல் தகுதி குறித்தும் எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு முன்பே பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் பிரசாரத்தில் நிதீஷ் குமாரின் உடல்நிலை, வயது ஆகியவற்றை வைத்து தொடா்ந்து விமா்சித்து வந்தாா். ஒரு கட்டத்தில் நிதீஷ் குமாரின் மனநலன், உடல் தளா்வு குறித்தும் அவா் வெளிப்படையாகப் பேசினாா்.

பிகாரில் புதிதாக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள முன்னாள் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரும், நிதீஷ் உடல் அளவிலும், மனதளவிலும் தளா்ந்துவிட்டாா் என்று விமா்சித்தாா்.

ஆனால், கட்சியின் தலைமையகத்துக்கு வந்தபோது நிதீஷ் குமாா் மிகவும் வேகமாகவும், உற்சாகமாகவும் நடந்து சென்றாா். அதே சமயம், உடன் வந்த அமைச்சா் விஜய் குமாா் சௌதரி, முதல்வரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் தடுமாறினாா். இதன் மூலம் தனது உடல் தகுதியை நிதீஷ் நிரூபித்துள்ளாா், அவரே முதல்வராகத் தொடா்வாா் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினா் தெரிவித்தனா்.