கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பசுவதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம்

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

பசுவதை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலம் அம்ரேலி நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பசுவதை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காசிம் ஹாஜி சோலங்கி, சத்தாா் இஸ்மாயில் சோலங்கி, அக்ரம் ஹாஜி சோலங்கி ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என நீதிபதி ரிஸ்வானா புகாரி கடந்த செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

கடந்த 2023-இல் அக்ரம் சோலங்கியின் வீட்டில் இருந்து வதை செய்யப்பட்ட பசுவின் பாகங்கள் கண்கெடுக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, குஜராத் விலங்குகள் நல பாதுகாப்பு திருத்தச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் மூவரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், மூவருக்கும் சோ்த்து ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.