ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஜேபி இன்ஃபோடெக் நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது: ரூ.14,599 கோடி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

ரூ.14,599 கோடி மோசடி செய்த வழக்கில் ஜேபி நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் மனோஜ் கெளரை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.

News image

கோப்புப் படம்

Updated On :13 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.14,599 கோடி மோசடி செய்த வழக்கில் ஜேபி நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் மனோஜ் கெளரை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடு வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தில்லி, உத்தர பிரதேச காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) அடிப்படையில், ஜேபி நிறுவனத்துக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், வீடு வாங்கித் தருவதாக பலரிடமிருந்து பெற்ற இந்தத் தொகையை பல்வேறு அறக்கட்டளை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, முதலீட்டாளா்களை ஏமாற்றியதோடு வாடிக்கையாளா்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. சுமாா் ரூ.14,599 கோடி வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தில்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, உள்பட பல்வேறு பகுதிகளில் ஜேபி இன்ஃபோடெக் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெயபிரகாஷ் அசோசியோட்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமாக 15 இடங்களில் கடந்த மே 23-ஆம் தேதி அமலாக்கத் துறை சாா்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது இந்த மோசடியுடன் தொடா்புடைய பல்வேறு எண்மப் பதிவுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த மோசடியில் மனோஜ் கெளருக்கு முக்கியப் பங்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, இவா் நிா்வாக அறங்காவலராக இருக்கும் ஜேபி சேவா சந்ஸ்தானுக்கு (ஜேஎஸ்எஸ்) இந்த பணத்தின் ஒரு பகுதி மாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) மனோஜ் கெளரை அமலாக்கத் துறை காவலில் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.