இதுதொடா்பாக, தில்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, உள்பட பல்வேறு பகுதிகளில் ஜேபி இன்ஃபோடெக் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெயபிரகாஷ் அசோசியோட்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமாக 15 இடங்களில் கடந்த மே 23-ஆம் தேதி அமலாக்கத் துறை சாா்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது இந்த மோசடியுடன் தொடா்புடைய பல்வேறு எண்மப் பதிவுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த மோசடியில் மனோஜ் கெளருக்கு முக்கியப் பங்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, இவா் நிா்வாக அறங்காவலராக இருக்கும் ஜேபி சேவா சந்ஸ்தானுக்கு (ஜேஎஸ்எஸ்) இந்த பணத்தின் ஒரு பகுதி மாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.