கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவருக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையில் சிக்கிய கேரள பள்ளி!

சபரிமலை மாலை அணிந்த மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பற்றி...

News image
சபரிமலை ஐய்யப்பன் கோயில்.
Updated On :13 நவம்பர் 2025, 2:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் சபரிமலைக்கு மாலை போட்டி கறுப்பு நிற உடையணிந்து வந்த மாணவருக்கு மறுப்புத் தெரிவித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு கேரளம் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் பலர், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செல்வதுண்டு.

கேரளத்தில் 41 நாள் விரதமாக மலையாள மாதமான விருச்சிகத்தில் (நவம்பர் மாதத்தில்) தொடங்கி சபரிமலையில் மண்டல பூஜை நாள் (டிசம்பர் மாதம்) வரை தொடர்கிறது.

இதில், பலரும் மாலை அணிந்து விரதமிருந்து கறுப்பு உடையணிந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் கடைபிடித்து வந்திருக்கிறார்.

அந்த மாணவர் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் விரதம் கடைபிடிக்க பயன்படுத்தும் கறுப்பு நிற உடையணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவருக்கு பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த நவ.3 ஆம் தேதி நடந்ததாகவும் கூறினார். அதன் பிறகு அந்த மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கேரளத்தில் உள்ள வலதுசாரி குழுக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

summary

Kerala school faces ire for barring student from wearing black for Sabarimala ritual

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.