கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆந்திரத்தில் 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்ப்பு!

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் தகவல்

News image

நாரா லோகேஷ்

கோப்புப் படம்

Updated On :13 நவம்பர் 2025, 2:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ், செய்தியாளர்களுடன் பேசுகையில் கடந்த 17 மாதங்களில் தரவு, உற்பத்தி, சேவை என பல்வேறு துறைகளில் 120 பில்லியன் டாலர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்துக்கான மகிழ்ச்சியான தருணமிது.

ஆந்திர பிரதேசத்தை மற்றைய மாநிலங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் திட்ட முதலீடுகளை ஈர்த்தல், அவற்றைக் கொண்டு வருதல், செயல்படுத்துவதுதான்.

இப்போது எங்களின் ஒரே நோக்கம் என்பது பல்வேறு துறைகளில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தலைமையின்கீழ் 20 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

Summary

Our single agenda is to create two million jobs across the various sectors says Andhra IT Minister Nara Lokesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.