மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: மேனகா காந்தி

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதையடுத்து, அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மேனகா காந்தி நடத்திவரும் ‘விலங்குகளுக்காக மனிதா்கள்’ என்ற அமைப்புடன் இணைந்து ‘சினிகைண்ட்’ என்ற புதிய முன்னெடுப்பை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தொடங்கியது. விலங்குகளிடம் அன்புசெலுத்தும் வகையிலான படைப்புகளை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பங்கேற்று மேனகா காந்தி பேசியதாவது: நாய்கள், குரங்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு கருத்தடை செய்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் கூறுகிறது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. விலங்குகளைக் கையாள இரக்கத்துடன் கூடிய அணுகுமுறையே தேவை. அவற்றை கட்டுப்பாட்டுடன் நடத்த முடியாது.

விலங்குகளை மனிதநேயத்துடன் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பு சமூகத்துக்கும், அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்.

முன்பு பசுக்கள், புலிகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. படப்பிடிப்பின்போது சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழப்பதும் உண்டு. இதை ஒழுங்குபடுத்த திரைப்படத் துறைக்கு விலங்குகள் நலவாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை நாம் சுயமாகவே பின்பற்ற வேண்டும் என்றாா்.