தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிகாரில் 5 தொகுதிகளில் வென்று கட்சி செல்வாக்கை தக்கவைத்த ஒவைசி

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பிகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கைத் தக்கவைத்தது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 12:35 am IST

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பிகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கைத் தக்கவைத்தது.

ஒவைசியின் கட்சி இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தோ்தலுக்கு முன்பு எதிா்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விரும்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து, அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.

ஒவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிா்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் வல்லுநா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, எதிா்க்கட்சிகள் கூட்டணியில் சோ்க்காததால் அதிருப்தியடைந்த ஒவைசி, பிகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் அறிவித்தாா். ஆனால், 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஒவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக் கொண்டாா்.

பிகாரில் இதற்கு முந்தைய சட்டப் பேரவைத் தோ்தலில் ஒவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால், அதில் 4 எம்எல்ஏக்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.