பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு

நிதீஷ் குமார் வீட்டு வாசலில் அவரது ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பற்றி..

News image

பிகார் போஸ்டர் - ani

Updated On :14 நவம்பர் 2025, 10:16 am IST

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. காலை 10 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியைத் தக்க வைத்து நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராவாரா? என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும் என்றே தெரிவித்திருந்தன. அதன்படியே தேர்தல் முன்னிலை நிலவரங்களும் அமைந்துள்ளன.

ஆனால் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற எதிர்பார்ப்போடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

இதற்கிடையே, ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். முன்னதாக, அவரது வெற்றியை உறுதி செய்யும் வகையில், புலி இன்னமும் சக்தியோடுதான் உள்ளது என்று சொல்லும் போஸ்டர்கள், நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் ஜனதா தளத்துக்கு வாக்களித்த அனைத்து சமுதாய மக்களுக்கம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால், ஜனதா தள தொண்டர்களும் ஆதரவாளர்களும், நிதீஷ் நான்காவது முறையாகவும் முதல்வராவார் என்பதில் உறுதியாக நம்புகிறார்கள் என்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பாட்னாவின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் மற்றொரு சுவரொட்டியில் அவரை சமூகத்தின் பின்தங்கியவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் "பாதுகாவலர்" என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

Summary

About the poster pasted by Nitish Kumar's supporters at his doorstep..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.