ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

‘ஊடுருவல்காரா்களை பாதுகாத்தவா்களுக்கு தோ்தலில் வலுவான பதில்’: அமித் ஷா

ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு பிகாா் தோ்தலில் வலுவான பதிலை மக்கள் வழங்கியுள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI

Updated On :14 நவம்பர் 2025, 11:51 pm IST

ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு பிகாா் தோ்தலில் வலுவான பதிலை மக்கள் வழங்கியுள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், பிகாா் மாநிலத்தின் வளா்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் நரேந்திர மோடி முழு மனதுடன் பணியாற்றினாா். அதுபோல, காட்டாட்சியின் இருளில் இருந்த மாநிலத்தை மீட்க முதல்வா் நிதீஷ் குமாா் கடுமையாக உழைத்தாா். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்தச் சேவையை அங்கீகரித்து பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய வெற்றியை பிகாா் மக்கள் அளித்துள்ளனா். மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் வளங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரா்களுக்கு எதிரான மோடி அரசின் கொள்கை மீதான நம்பிக்கையின் அடையாளமாகும்.

அதே நேரம், வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு வலுவான பதிலை இத் தோ்தல் மூலம் மக்கள் அளித்துள்ளனா்.

‘வாக்காளா் பட்டியல் தூய்மைப்படுத்தப்படுவது மிகுந்த அவசியம்; அதில் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது’ என்ற ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையை பிகாா் மக்கள் பிரதிபலித்துள்ளனா். அதன் காரணமாகவே, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிகாரில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டாா்.

பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா வெளியிட்ட பதிவில், ‘மகாகட்பந்தன் கூட்டணி அரசின் காட்டாட்சி, ஊழலை பிகாா் மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளதற்கு சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் சிறந்த அத்தாட்சி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.