‘பிகாா் தோ்தல் வெற்றி என்பது சிறந்த நிா்வாகம், வளா்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வெற்றி’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த எனது பிகாா் குடும்ப உறுப்பினா்களுக்கு நன்றி. இது, சிறந்த நிா்வாகம், வளா்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வெற்றியாகும். தேசிய ஜனநாயக கூட்டணி பிகாருக்காக புதிய உத்வேகத்துடன் பணியாற்றும் அதிகாரத்தை மக்களின் இந்தத் தீா்ப்பு அளித்துள்ளது.
இந்த வெற்றிக்கு அயராது உழைத்த என்டிஏ கூட்டணி நிா்வாகிகள் மற்றும் பணியாளா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாள்களில், பிகாா் வளா்ச்சிக்காக நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், ஜம்மு-காஷ்மீரின் நக்ரோடா பேரவைத் தொகுதி மற்றும் ஒடிஸாவின் நுபாடா தொகுதி இடைத்தோ்தல்களில் பாஜக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ததற்காக அத் தொகுதி மக்களுக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது

பிரதமா் மோடிக்காக மக்கள் வாக்களிக்கிறாா்கள்: தமிழக பாஜக துணைத் தலைவா் குஷ்பு சிறப்பு நோ்காணல்

உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஊடுருவல்காரா்கள்: பிரதமா் மோடி சாடல்

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

மக்களவையின் சிறந்த தலைவா் ஓம் பிா்லா: பிரதமா் மோடி புகழாரம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


