திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

இந்தியாவுக்கு 30,000 விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

இந்தியாவுக்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்...

News image

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு - (கோப்புப் படம்) எக்ஸ்

Updated On :15 நவம்பர் 2025, 6:47 pm IST

இந்திய விமான நிறுவனங்களின் புதிய விமானங்களை இயக்குவதற்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 17,000 புதிய விமானங்களை ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அந்த விமானங்களை இயக்குவதற்கு கூடுதலாக 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“தற்போது இந்தியாவில் 834 விமானக்குழுக்களில் 8,000 விமானிகள் இருக்கின்றனர். ஒரு விமானத்தை அட்டவணையின்படி இயக்குவதற்கு 10 முதல் 15 விமானிகள் தேவை. அதன்படி, புதியதாக வாங்கப்படும் 1,700 விமானங்களுக்கு கூடுதலாக 25,000 முதல் 30,000 விமானிகள் தேவைப்படுவார்கள்.

எனவே, விமானிகள் பற்றாக்குறையை சரிசெய்ய நாட்டில் அதிகமான விமானி பயிற்சி அமைப்புகள் இருக்கவேண்டும். இதுவரை, இருப்பவை மூலம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே விமானிகள் உருவாக்கப்படுகிறார்கள். இந்திய விமானப் பிரிவில் உருவாகும் ஒரு வேலை வாய்ப்பானது மேலும் 15 வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடும் ” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், நாட்டில் நாள்தோறும் சுமார் 4.8 லட்சம் மக்கள் விமானப் போக்குவரத்தின் மூலம் பயணிப்பதாகவும், கடந்த நவ.10 ஆம் தேதி அன்று மட்டும் 5.3 லட்சம் மக்கள் விமானங்கள் மூலம் பயணம் செய்திருப்பது புதிய சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Union Aviation Minister Ram Mohan Naidu has said that Indian airlines will need an additional 30,000 pilots to operate the upcoming new aircraft.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.