திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கு: நடிகர் ராணா விசாரணைக்கு ஆஜர்!

நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜர்!

News image

ராணா டகுபதி - Center-Center-Chennai

Updated On :15 நவம்பர் 2025, 6:54 pm IST

ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில், நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.

தெலங்கானாவில், ‘தெலங்கானா விளையாட்டுச் சட்டம், 2017-இன்’ கீழ், அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, கண்காணிக்க தெலங்கானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

இதனிடையே, ராணா மட்டுமில்லாது வேறு சில திரைத்துறை, சமூக ஊடகப் பிரபலங்களும் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துதல் உள்பட அவற்றுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில் ராணாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, தெலங்கானா சிஐடியின் ஏடிஜிபி மேற்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு முன்பு ராணா சனிக்கிழமை(நவ. 15) ஆஜரானார்.

Summary

Actor Rana Daggubati on Saturday appeared before the SIT in Telangana in connection with a case related to alleged promotion of an online betting app, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.