திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மரண தண்டனை குற்றவாளி ஹசீனாவை ஒப்படைக்க வலியுறுத்தல்!

இந்தியாவில் அடைக்கலமாயிருக்கும் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் வலியுறுத்தல்

News image

ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :17 நவம்பர் 2025, 6:06 pm IST

இந்தியாவில் அடைக்கலமாயிருக்கும் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு வங்கதேசம் கடிதம் அனுப்பியுள்ளது.

வங்கதேசத்தில் மக்களைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனிடையே, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறையாக கடிதம் அனுப்பி கோரியுள்ளது.

கடிதத்தில் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது, ``இரு நாடுகளுக்கிடையேயான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்கீழ், தப்பியோடிய குற்றவாளிகளை திருப்பி அனுப்பும் கடமை இந்தியாவுக்கு உள்ளது.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்மான் கான் கமல் ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் எந்தவொரு நாட்டாலும் அடைக்கலம் வழங்குவது நீதிக்கு அவமரியாதையாகவும், நட்பற்ற செயலாகவும் கருதப்படும்.

ஆகையால், அவர்களை உடனடியாக நாடுகடத்தவும், வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Summary

Bangladesh writes to India seeking Former PM Sheik Hasina's return after death penalty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.