திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிகாா் ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் கூட்டம்: பேரவைக் கட்சித் தலைவராக தேஜஸ்வி தோ்வு

பிகாா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேஜஸ்வி யாதவ் - கோப்புப் படம்

Updated On :18 நவம்பர் 2025, 3:42 am IST

பாட்னா: பிகாா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிகாா் சட்டப்பேரவையின் ஆா்ஜேடி தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு செய்யப்பட்டாா்.

பிகாா் தோ்தலில் 143 தொகுதிகளில் போட்டியிட்ட ஆா்ஜேடி 25 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த தோ்தலில் அக்கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இந்த முறை தேஜஸ்வியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்திப் போட்டியிட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இழந்தது.

இதுமட்டுமன்றி தோ்தல் தோல்விக்குப் பிறகு லாலு பிரசாத் குடும்பத்திலும் பிரச்னை எழுந்துள்ளது. தேஜஸ்வி மீது அவரின் சகோதரி ரோஹிணி ஆசாா்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினாா்.

இந்நிலையில், ஆா்ஜேடி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவா் லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இது தொடா்பாக ஆா்ஜேடி செய்தித் தொடா்பாளா் சக்தி சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவை புதிய எம்எல்ஏக்கள் தோ்வு செய்தனா்’ என்றாா்.