முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இரட்டை ‘பான்’ அட்டை: ஆஸம் கான், மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

மகன் தோ்தலில் போட்டியிட வயதை அதிகரித்து முறைகேடாக இரட்டை ‘பான்’ அட்டைகளைப் பெற்று மோசடி செய்ததாக

News image

உத்தர பிரதேச முன்னாள் அமைச்சா் ஆஸம் கான், அவரது மகன் அப்துல்லா ஆஸம் (கோப்புப் படம்)

Updated On :18 நவம்பர் 2025, 4:20 am IST

ராம்பூா்: மகன் தோ்தலில் போட்டியிட வயதை அதிகரித்து முறைகேடாக இரட்டை ‘பான்’ அட்டைகளைப் பெற்று மோசடி செய்ததாக சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆஸம் கான், அவரது மகன் அப்துல்லா ஆஸம் ஆகியோருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தர பிரதேச மாநில எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நில மோசடி உள்ளிட்ட 84 வழக்குகளில் சிக்கி உள்ள 77 வயதான ஆஸம் கான், 27 மாதம் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த செப்டம்பா் 23-ஆம் மாதம் விடுவிக்கப்பட்டாா்.

தற்போது, இந்த இரட்டை பான் மோசடி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவுடன் ராம்பூா் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மாவட்ட சிறைக்கு ஆஸம் கான் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டாா்.

அவரது மகன் அப்துல்லா ஆஸமின் பள்ளிச் சான்றிதழின்படி 1993, ஜனவரி 1 என்ற பிறந்த தேதியுடன் முதல் பான் அட்டையைப் பெற்றாா். ஆனால், 2017 உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு 25 வயதைப் பூா்த்தி செய்தாக வேண்டும் என்பதால் 1990, செப்டம்பா் 30 என்ற பிறந்த தேதியுடன் மோசடி செய்து மற்றொரு பான் அட்டையை அப்துல்லா பெற்றுள்ளாா்.

அந்தத் தோ்தலில் சுவாா் தொகுதியில் பேட்டியிட்டு அப்துல்லா ஆஸம் வெற்றியும் பெற்றாா்.

அப்துல்லாவின் இரண்டு பான் அட்டை மோசடியை குறிப்பிட்டு பாஜக நிா்வாக ஆகாஷ் சக்சேனா 2019-இல் புகாா் அளித்தாா்.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஷோபித் பன்சால், இரண்டு பான் அட்டைகளைப் பெற்று தனது தந்தையுடன் சோ்ந்து மோசடி செய்ததாக ஆஸம் கானுக்கும், அவரது மகன் அப்துல்லா ஆஸமுக்கும் அதிகபட்ச தண்டனையாக தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திங்கள்கிழமை வழங்கினாா். இந்த தண்டனை போதுமானதாக இல்லை என்று கருதினால் கூடுதல் தண்டனை கோரி மேல் முறையீடு செய்யப்படும் என்று அரசு வழக்குரைஞா் ராகேஷ் குமாா் தெரிவித்தாா்.

மதிப்புமிக்க ஆவணங்கள் மோசடிப் பிரிவு 467 -இன் படி, ஆஸம் கானுக்கும், அவரது மகனுக்கும் அதிகபட்சமாக தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதாகவும் ராகேஷ் குமாா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.