பாட்னா: குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத்.
இந்தக் கூட்டத்தில், லாலு யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும் மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய லாலு, குடும்பத்துக்குள் என்ன நடந்தாலும், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை நானே வீட்டுக்குள் முடித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிகார் தேர்தல் முடிவுகளில், கட்சியின் மோசமான தோல்விக்கும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை, லாலு வீட்டிலிருந்து வெளியேறிய அவரது மகள் ரோஹிணி, தன்னுடைய சகோதரர் தேஜஸ்வி மற்றும் அவரது உதவியாளர்கள் தன்னை அவமரியாதை செய்ததாகவும் தாக்க முயன்றதாகவும் கூற்றம்சாட்டியிருந்தார்.
பிகார் தேர்தல் தோல்விக்கு யாா் பொறுப்பு என்ற வாக்குவாதத்தின்போது, தன்னை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக இளைய மகன் தேஜஸ்வி யாதவ் மீது இண்டாவது மகள் ரோஹிணி ஆச்சாா்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது

குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்

குடும்பச் சண்டையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


