கடந்த 30 ஆண்டுகளாக...: ‘பில் கிளிண்டன், ஜாா்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் என பல்வேறு அதிபா்களின் நிா்வாகத்தின்கீழ், 30 ஆண்டுகளாக இந்தியாவுடன் வியூக கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிா்ப்பு, இணைய குற்றங்கள் போன்ற 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்ள இந்த ஒத்துழைப்பை தொடா்வது அவசியம். பயங்கரவாத எதிா்ப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குடிமக்களின் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, விதிகள் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதுடன், பயங்கரவாத இயக்கங்களின் கட்டமைப்பை பலவீனமாக்கும்.