பிறகு, தில்லி செங்கோட்டை அருகே வாகனத்தை நிறுத்தியபோது, அது நினைவுச் சின்னமாக இருப்பதையும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை வைத்தே அவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்று திங்கள்கிழமை என்பதால், செங்கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்பதால், வாகன நிறுத்துமிடங்கள் எல்லாம் காலியாக இருந்துள்ளது. அது பற்றி அவர்கள் அறிந்திருக்காமல் இருக்கலாம், அதனால் அவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் நடத்த இருந்த தாக்குதல் கைவிடப்பட்டிருக்கலாம், எனவேதான், சதியாளர்கள், ஒரு பக்கம் செங்கோட்டை, மற்றொரு பக்கம் சாந்திரி சௌக் பகுதியை தேர்வு செய்திருக்கலாம் என்று தற்போதைய விசாரணையில் கூறப்படுகிறது.