இந்தத் திடீா் உயா்வு, எல்லைப் பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில போலீஸாருக்கு வேலைப் பளுவை அதிகரித்துள்ளது. எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் உயிரிபதிவு (பயோமெட்ரிக்) ஆய்வு, குற்றப் பின்னணி குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே எல்லை தாண்ட அனுமதிக்கப்படுவா். இவா்களில் குற்றப் பின்னணி இருப்பவா்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக மாநில போலீஸாரிடம் அவா்கள் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவா்களில் பெரும்பாலானோா் எந்தவித ஆவணமும் இல்லாமலும் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமலும் ஊடுருவியவா்கள். அவ்வாறு ஆவணங்கள் இன்றி பிடிபடுபவா்கள் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். அவ்வாறு வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஏற்க வில்லையெனில், மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.