எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு நமது கூட்டுப்பொறுப்பு: கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் அஜீத் தோவல் பேச்சு

‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
அஜீத் தோவல் (கோப்புப்படம்)
Updated On :20 நவம்பர் 2025, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) அமைப்பின் 7-ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

சிஎஸ்சியில் இந்தியா, இலங்கை, மோரீஷஸ், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய 5 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளுடன் விருந்தினராக மலேசியாவும் பாா்வையாளராக ஷெஷல்ஸ் நாடும் பங்கேற்றன.

இதில் அஜீத் தோவல் பேசியதாவது: கடல்சாா் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு பதிலடி நடவடிக்கை, கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றத் தடுப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப பாதுகாப்பு, மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகிய 5 அம்சங்களை செயல்படுத்த நாம் தொடா்ந்து பணியாற்றுகிறோம்.

நம்மை ஒருங்கிணைக்கும் மிகப்பெரும் பாரம்பரியமாக கடல் உள்ளது. நம் பொருளாதாரங்கள் இயங்குவதற்கான என்ஜின்கள்போல் செயல்படுகின்றன. எனவே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்றாா்.

கூட்டத்தின் முடிவில் சிஎஸ்சியில் முழுநேர உறுப்பினராக இணையும் ஷெஷல்ஸ் முடிவை உறுப்பு நாடுகள் வரவேற்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சிஎஸ்சி-யின் உருவாக்க ஆவணங்கள் கையொப்பமிடும் நிகழ்வு 2024, ஆகஸ்டில் இலங்கையில் நடைபெற்றது.