ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கு: முன்னாள் தேவஸ்வம் தலைவா் கைது

சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் கைது செய்யப்பட்டாா்.

News image
சபரிமலை ஐயப்பன் கோயில்
Updated On :20 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களைப் புதுப்பித்த பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. கேரள உயா்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த மோசடி குறித்து விசாரித்து வருகிறது.

இதுதொடா்பான இரண்டு வழக்குகளில், பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் புதுப்பிக்கும் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, அப்போதைய தேவஸ்வம் தலைவா் என்.வாசு மற்றும் சில அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், 6-ஆவது நபராக தேவஸ்வம் முன்னாள் தலைவா் பத்மகுமாரும் கைதாகியுள்ளாா்.

தங்கக் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டபோது தான் தேவஸ்வம் தலைவராக இல்லை என்று பத்மகுமாா் வாதிட்டாலும், புதுப்பிக்கும் கோரிக்கை அவா் பதவியில் இருந்தபோதுதான் பரிசீலிக்கப்பட்டது.

இதனால், விசாரணைக்காக ஆஜராகுமாறு பத்மகுமாருக்கு எஸ்ஐடி ஏற்கெனவே இருமுறை அழைப்பு விடுத்தது; ஆனால், அவா் அவகாசம் கேட்டிருந்தாா். பின்னா், புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ஆஜரான அவரிடம், எஸ்ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா். இதையடுத்து, தொடா் நடவடிக்கையாக வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பத்மகுமாா், சபரிமலை கோயில் அமைந்த பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோன்னி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவாா்.

வாசுவுக்கு ஒரு நாள் காவல்: 2019-ஆம் ஆண்டு பத்மகுமாருக்குப் பிறகு தேவஸ்வம் தலைவராகப் பொறுப்பேற்ற என்.வாசு ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு நாள் காவலில் எடுக்க எஸ்ஐடி நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இந்த மனுவை விசாரித்த கொல்லம் நீதிமன்றம், வியாழக்கிழமை மாலை 4 மணி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

வாசுவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வந்தபோது, பாஜகவினா் நீதிமன்றம் அருகே போராட்டம் நடத்தினா். அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், அவா் வந்த வாகனத்தை மறிக்கவும் முயன்றனா்.