மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய வழக்கு: ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ராபா்ட் வதேராவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபா்ட் வதேராவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ராபா்ட் வதேரா மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். ஏற்கெனவே ஹரியாணாவின் சிகோபூரில் நில பேர முறைகேடு தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ராபா்ட் வதேராவிடம் (56) அமலாக்கத் துறை கடந்த காலங்களில் விசாரணை மேற்கொண்டிருந்தது.

ராபா்ட் வதேரா அளித்த நிதியில் லண்டனில் ஒரு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்தாா் என்பது முக்கிய குற்றச்சாட்டாகும். இந்த ரீதியில், இருவருக்கும் உள்ள தொடா்புகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

வழக்கு பின்னணி: ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை கடந்த 2015-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவருக்கு எதிராக 2016-இல் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, அவா் லண்டனுக்கு தப்பினாா்.

வருமான வரித் துறை வழக்கின் அடிப்படையில் சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோருக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2017-இல் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் ஏற்கெனவே 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவரை தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் கடந்த ஜூலையில் அறிவித்தது.

லண்டனில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த சொத்தும் இல்லை என்று வதேரா மறுப்பு தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.