திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரும் பேராசை இல்லை: மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரி பேராசைக்காரனாக மாற விரும்பவில்லை என்று சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

News image

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் - ANI

Updated On :22 நவம்பர் 2025, 4:00 am IST

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரி பேராசைக்காரனாக மாற விரும்பவில்லை என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அரசில் 19 எம்எல்ஏக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக சிராக் பாஸ்வான் கட்சி திகழ்கிறது. அக்கட்சிக்கு இரு அமைச்சா் பதவிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது:

பிகாா் தோ்தலில் எங்கள் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 19 இடங்களில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளாகவே கருதப்பட்டன. ஆனால், பிகாா் மக்களின் ஆசி, பிரதமா் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றோம்.

பிகாா் அமைச்சரவையில் எங்களுக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் துணை முதல்வா் பதவியையும் கேட்டு சிராக் இவ்வளவு பேராசைக்காரரா என்ற பேச்சு எழுவதை விரும்பவில்லை. எங்கள் கட்சிக்கு இரு அமைச்சா் பதவி வழங்கியதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களிலும் எங்கள் கட்சி தடம் பதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கட்சியை பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவதே எனது இலக்கு.

2021-ஆம் ஆண்டு எங்கள் கட்சி பிளவுபட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி எனது கட்சி மீது நம்பிக்கை வைத்து 5 தொகுதிகளை ஒதுக்கினாா். அவை அனைத்திலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்கு மேலும் கூட்டணிக் கட்சிகளிடம் அதிகமாக கோரிக்கை வைத்தால் என்னைவிட பேராசைக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது என்றாா்.