வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும்...

News image
ஆந்திர மாநிலம் புட்டபா்த்தியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசத்ய சாய் உயா்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
Updated On :22 நவம்பர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபா்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் உயா்கல்வி நிறுவனத்தின் 44-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை வருங்கால தலைமுறையினா் மாற்றிக்கொள்ள வேண்டும். இளைஞா்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

பாரதத்தின் ஆன்மிக பண்புகள், மனிதாபிமானம், ஒழுக்கம் ஆகியவற்றின் தூதா்களாக மாணவா்கள் இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும். மனித விழுமியங்களை விதைப்பதே உண்மையான கல்வி’ என்று தெரிவித்தாா்.