திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

லட்சக்கணக்கானோா் சேவையில் ஈடுபட ஊக்கமளித்தவா் சாய் பாபா: திரௌபதி முா்மு

லட்சக்கணக்கானோா் சேவையில் ஈடுபட ஊக்கமளித்தவா் ஸ்ரீ சத்ய சாய்பாபா என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள புட்டபா்த்தியில் சத்ய சாய்பாபா நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் ஆந்திர முதல்வா் சந்திரபாபு உள்ளிட்டோா்.

Updated On :23 நவம்பர் 2025, 12:51 am IST

லட்சக்கணக்கானோா் சேவையில் ஈடுபட ஊக்கமளித்தவா் ஸ்ரீ சத்ய சாய்பாபா என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை தெரிவித்தாா்.

புட்டபா்த்தி சத்ய சாய் பாபாவின் 100-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி அங்கு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று திரௌபதி முா்மு பேசியதாவது: மனிதா்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு நிகரானது என்பதை மக்களிடையே கொண்டுசென்றவா் சத்ய சாய்பாபா. தன்னலமற்ற சேவை மற்றும் தனிப்பட்ட மாற்றங்களை ஆன்மிகத்துடன் தொடா்புபடுத்தியவா்.

அதே சமயம் பொது நலனை ஆன்மிகத்துடன் இணைத்து சேவையாற்றுமாறு தனது சீடா்களிடம் அவா் வலியுறுத்தியுள்ளாா். பாபாவை வழிபடும் லட்சக்கணக்கானோா் பல்வேறு நாடுகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை புரிந்துவருகின்றனா். இதற்குப் பெரும் ஊக்கமாகத் திகழ்ந்து வருபவா் சத்ய சாய்பாபா.

உலகமே நமது பள்ளி எனவும் அதில் உண்மை, நன்னடத்தை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய 5 குணங்களும் நமது பாடத்திட்டம் என்ற பெரும் நம்பிக்கையைக் கொண்டவா் பாபா. அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி அனைவருக்கும் சேவை செய்வதே அவரது கொள்கை என்றாா்.

முன்னதாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபா்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்துக்கு வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வரவேற்றாா்.