டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேராசிரியா் ஜோசப் தாக்குதல் வழக்கு: என்ஐஏ கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

கேரளத்தில் பேராசிரியா் டி.ஜே.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில், கூடுதல் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி

News image
டி.ஜே.ஜோசப்
Updated On :23 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு பேராசிரியா் டி.ஜே.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில், கூடுதல் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இடுக்கி மாவட்டம், தொடுபுழையில் உள்ள நியூமேன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டி.ஜே. ஜோசப், 2010-ஆம் ஆண்டு நவம்பரில் அவா் தயாரித்த வினாத்தாளில் மதத்தை அவமதிக்கும் கருத்து இருந்ததாகக் கூறி, ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது வலது கை வெட்டப்பட்டது.

பின்னா், என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்த வழக்கில் 19 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சாவத், ஷாஜஹான் என்ற பெயரில் கண்ணூா் மாவட்டம் மட்டன்னூரில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டாா்.

சாவத்திடம் விசாரணை நடத்தியபோது, தமிழகத்தின் பன்றிமலை, திண்டுக்கல் மற்றும் கண்ணூரில் அவருக்கு மறைவிடம் மற்றும் வேலைக்கு ஏற்பாடு செய்ய ‘பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ தலைவா்களும் உறுப்பினா்களும் உதவியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டு முதல் சாவத்துக்கு அடைக்கலம் அளித்ததாக ஷஃபீா் என்பவரையும் என்ஐஏ கைது செய்தது.

இந்த வழக்கில் கூடுதல் அறிவியல் ஆதாரங்களைத் திரட்டவும், இந்தக் குற்றச்சதித்திட்டம் மற்றும் குற்றவாளிக்கு உதவியதில் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காணவும் மேலும் விசாரணை தேவை என்று கூறி, கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ கடந்த 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.

என்ஐஏ மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்டறிந்த சிறப்பு நீதிபதி பி.கே. மோகன்தாஸ், வழக்கில் என்ஐஏ கூடுதல் விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.