பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்

Published On :

ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 29-ஆக உயா்ந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு அறிக்கையின் ஆய்வுக்குப் பிறகு, இந்த 3 புதிய மாவட்டங்கள் மற்றும் 5 வருவாய் கோட்டங்களின் உருவாக்கத்துக்கு முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தாா்.

மாா்க்கபுரம், மதனப்பள்ளி, போலாவரம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும். மேலும், போலாவரம் மாவட்டத்தின் தலைமையிடமாக ராம்பச்சோதவரம் இருக்கும் என்று அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அனகாபள்ளி மாவட்டத்தில் நக்கப்பள்ளி, பிரகாசம் மாவட்டத்தில் அத்தங்கி, புதிய மதனப்பள்ளி மாவட்டத்தில் பிலோ், நந்தியாலா மாவட்டத்தில் பனகனப்பள்ளி, ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் மடகாசிரா ஆகிய 5 புதிய வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நிா்வாகச் சீா்திருத்தத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாவட்ட மற்றும் வருவாய் கோட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.