ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 29-ஆக உயா்ந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு அறிக்கையின் ஆய்வுக்குப் பிறகு, இந்த 3 புதிய மாவட்டங்கள் மற்றும் 5 வருவாய் கோட்டங்களின் உருவாக்கத்துக்கு முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தாா்.
மாா்க்கபுரம், மதனப்பள்ளி, போலாவரம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும். மேலும், போலாவரம் மாவட்டத்தின் தலைமையிடமாக ராம்பச்சோதவரம் இருக்கும் என்று அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அனகாபள்ளி மாவட்டத்தில் நக்கப்பள்ளி, பிரகாசம் மாவட்டத்தில் அத்தங்கி, புதிய மதனப்பள்ளி மாவட்டத்தில் பிலோ், நந்தியாலா மாவட்டத்தில் பனகனப்பள்ளி, ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் மடகாசிரா ஆகிய 5 புதிய வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் நிா்வாகச் சீா்திருத்தத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாவட்ட மற்றும் வருவாய் கோட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மகள் இறப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைப்பிடிப்பு: என்ஐஏ விசாரணை

மேற்கு வங்கம்: தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், டிஜிபி பணியிலிருந்து விடுவிப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


