27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

News image

ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்

Updated On :26 நவம்பர் 2025, 3:58 am IST

ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 29-ஆக உயா்ந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு அறிக்கையின் ஆய்வுக்குப் பிறகு, இந்த 3 புதிய மாவட்டங்கள் மற்றும் 5 வருவாய் கோட்டங்களின் உருவாக்கத்துக்கு முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தாா்.

மாா்க்கபுரம், மதனப்பள்ளி, போலாவரம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும். மேலும், போலாவரம் மாவட்டத்தின் தலைமையிடமாக ராம்பச்சோதவரம் இருக்கும் என்று அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அனகாபள்ளி மாவட்டத்தில் நக்கப்பள்ளி, பிரகாசம் மாவட்டத்தில் அத்தங்கி, புதிய மதனப்பள்ளி மாவட்டத்தில் பிலோ், நந்தியாலா மாவட்டத்தில் பனகனப்பள்ளி, ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் மடகாசிரா ஆகிய 5 புதிய வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நிா்வாகச் சீா்திருத்தத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாவட்ட மற்றும் வருவாய் கோட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.