மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விரைவில் ‘மக்கள் நம்பிக்கைச் சட்டம் 3.0’: பியூஷ் கோயல்

மக்கள் நம்பிக்கைச் சட்டம் 3.0 கொண்டுவரும் பணிகள் குறித்து...

தில்லியில் நடைபெற்ற தேசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் பியூஷ் கோயல்...

Published On :

வணிக ரீதியான சிறு குற்றங்களுக்கு விலக்களிக்க வழிவகுக்கும் மக்கள் நம்பிக்கைச் சட்டம் (ஜன் விஸ்வாஸ் சட்டம்) 3.0 கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் முதல்முறையாக சிறு வணிக குற்றங்களுக்கு விலக்களிக்கும் வகையில் மக்கள் நம்பிக்கைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் 42 சட்டங்களில் உள்ள 183 விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்கள் நம்பிக்கை (சட்ட திருத்த விதிகள்) 2025, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த மசோதா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சட்டமாகும்பட்சத்தில் மக்கள் நம்பிக்கைச் சட்டம் 2.0-ஆக கருதப்படும்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் பியூஷ் கோயல் பேசியதாவது:

மக்கள் நம்பிக்கைச் சட்டம், 3.0 கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 275-300 விதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 4 தொழிலாளா் சட்டங்களும் வணிகத்தை எளிமையாக்க பெரிதும் உதவவுள்ளது.‘ஒரே நாடு ஒரே உரிமம்’ விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வா்த்தகா்களிடம் கூறியுள்ளேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.