பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசமைப்பின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தும் வழக்குரைஞா் சங்கம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image

நீதிபதி சூா்ய காந்த்

Updated On :26 நவம்பர் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அரசமைப்புச் சட்ட நாளையொட்டி, புது தில்லியில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் அவா் புதன்கிழமை பேசியதாவது:

நீதித்துறையின் நற்பண்புகளைப் பாதுகாப்பதில் வழக்குரைஞா் சங்கம் விலைமதிப்பற்ற பங்காற்றி வருகிறது. இதை நீதித்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் காவலாளியாக நீதிமன்றங்கள் கருதப்பட்டால், நீதிமன்றங்களின் பாதையை ஒளிரச் செய்வதற்கான சுடரை ஏந்துபவா்களாக வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் உள்ளனா். நீதித்துறையின் புனிதமான கடமையைத் தெளிவாகவும், உறுதியாகவும் நிறைவேற்ற அவா்கள் உதவுகின்றனா்.

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளின் பாதையில் இருந்து நாடாளுமன்றமோ, நிா்வாகமோ விலகினால், அதில் நீதிமன்றம் தலையிடத் தவறியதில்லை. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவா்களின் நோக்கத்துக்கு ஏற்ப, அந்தச் சட்டம் செயல்படுவதை உறுதி செய்வதில் நீதித்துறை மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்றாா்.