திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

தில்லி காற்று மாசால் தன் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது பற்றிய தாயின் பதிவு...

News image

மருத்துவமனையில் குழந்தையுடன் சாக்ஷி... - instagram

Updated On :26 நவம்பர் 2025, 11:25 am IST

தில்லியில் மோசமான காற்று மாசால் தன் மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தாய் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தில்லியில் காற்று மாசு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாக தில்லி மாறி வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தொடர்ந்து 'மிகவும் மோசம்' பிரிவில் காற்றின் தரம் நீடிக்கிறது. தில்லி காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றன.

இந்நிலையில் தில்லியில் அதிகமான காற்று மாசால் தன் மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாக குழந்தையின் தாய் சாக்ஷி இன்ஸ்டா பக்கத்தில் ஆதங்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவர் தன் மகன் மருத்துவமனையில் இருக்கும் விடியோவைப் பதிவிட்டு,

"தில்லி காற்று மாசுபாடு, நாம் சுவாசிக்கும் காற்றை மட்டும் பாதிக்கவில்லை.. என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தில்லிக்கு குடிபெயர்ந்தோம், அன்றிலிருந்து மகனுக்கு சளி, இருமல், அலர்ஜி, சுவாசப் பிரச்னைகள் தொடங்கியது.

எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. மாறாக மேலும் அதிகரித்த காற்று மாசுபாடு, என் மகனின் உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது. மகனுக்கு தொண்டை மற்றும் மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வலியில் அவன் மருத்துவமனையில் அழுவதைப் பார்த்து நாங்கள் மிகவும் மனதளவில் உடைந்துவிட்டோம்.

தில்லியில் உள்ள குழந்தைகளின் நிலை இதுதான். ஆனால் இந்த அரசு இன்னும் அமைதியாக இருக்கிறது.

நாங்கள் வரி செலுத்துகிறோம். அதற்கு பதிலாக எங்கள் குழந்தைகள் பெறுவது இதுதான். தில்லி காற்று மாசு குறித்து பேச வேண்டிய நேரம் இது" என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பலரும் சாக்ஷியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரது மகன் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Delhi air pollution: Mother says young son forced to go into surgery after 2 years of respiratory distress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.