வா்த்தகம், முதலீடுகள் ஊக்குவிப்பு: ஸ்லோவேனியாவுடன் இந்தியா ஆலோசனை
புது தில்லி: இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-ஆவது அமா்வு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில், வேளாண், ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடத்தர நிறுவனங்கல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான சமமான, பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
