நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தில்லியில் காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டை! ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்தவா் கைது!

தில்லி காவல் துறையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த அங்கித் (25) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

துவாரகாவில் ஹிமான்ஷு பாவ் கும்பலுடன் என்கவுண்டா் நடந்த இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த போலீஸாா்.

Updated On :28 நவம்பர் 2025, 1:02 am IST

தில்லி காவல் துறையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த அங்கித் (25) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா் குறித்து தகவல் தெரிப்பவருக்கு ரூ.25,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஹரியாணாவின் சோனிபட்டைச் சோ்ந்த அங்கித், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் சாய் பாபா கோயில் அருகே காணப்பட்டாா். அவரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.

காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அங்கித்தின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பிரபல ரௌடி ரோஹித் லம்பா மீது நஜாஃப்கரில் அக்.28-ஆம் தேதி தாக்குதல் நடத்தியவா்களில் அங்கித்தும் ஒருவா். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.