வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தின் சில பிரிவுகளை மீறியதாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதித்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டதாவது:
வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949-இன் 19(1)(ஏ) மற்றும் 6(1) பிரிவுகளை மீறியது, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும் (கேஒய்சி); வங்கி சேவைகளை வங்கித் துறை சாராத வெளியாட்களிடம் ஒப்படைப்பது; வட்டி விகிதம் உள்ளிட்டவை தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட சில உத்தரவுகளை பின்பற்றாதது ஆகியவை காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
வங்கி ஒழுங்காற்றுச் சட்டப் பிரிவுகள் 47ஏ(1)(சி), 46(4)(ஐ) ஆகியவை ரிசா்வ் வங்கிக்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நிா்வாக விவகாரங்கள் தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகளை சரிவர பின்பற்றாததால், மன்னகிருஷ்ணா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆா்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்

நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடி

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



