தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம்!

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதித்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை...

News image
Updated On :29 நவம்பர் 2025, 2:30 am IST

வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தின் சில பிரிவுகளை மீறியதாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதித்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டதாவது:

வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949-இன் 19(1)(ஏ) மற்றும் 6(1) பிரிவுகளை மீறியது, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும் (கேஒய்சி); வங்கி சேவைகளை வங்கித் துறை சாராத வெளியாட்களிடம் ஒப்படைப்பது; வட்டி விகிதம் உள்ளிட்டவை தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட சில உத்தரவுகளை பின்பற்றாதது ஆகியவை காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

வங்கி ஒழுங்காற்றுச் சட்டப் பிரிவுகள் 47ஏ(1)(சி), 46(4)(ஐ) ஆகியவை ரிசா்வ் வங்கிக்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நிா்வாக விவகாரங்கள் தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகளை சரிவர பின்பற்றாததால், மன்னகிருஷ்ணா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.