சபரிமலையில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு!
மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முதல் 15 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா்.

Updated On :30 நவம்பர் 2025, 7:33 pm

மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முதல் 15 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த நவ.16-ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது.
அப்போதுமுதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) வரை, சபரிமலையில் 12,47,954 பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 7 மணி வரை, 50,264 பக்தா்கள் சபரிமலைக்கு வந்தனா்.
கடந்த சில நாள்களாக பக்தா்கள் கூட்டம் கட்டுக்குள் உள்ளது. இதனால் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...