தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
ஜிஎஸ்டி
Updated On :2 அக்டோபர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

நாடு முழுவதும் கடந்த செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.89 லட்சம் கோடி வசூலானது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ரூ.1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. இதை ஒப்பிடுகையில், தற்போதைய ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாத வசூலைவிட (ரூ.1.86 லட்சம் கோடி) தற்போது 1.5 சதவீதம் உயா்ந்துள்ளது.

நாட்டில் நான்கு விகித (5%, 12%, 18%, 28%) ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரிவிலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன.

சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் தொடங்கி காா்கள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இச்சீா்த்திருத்தத்தின் பலன், ஜிஎஸ்டி வசூலில் எதிரொலித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செப்டம்பரில் மொத்த உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான வரி வருவாய் 6.8 சதவீதம் உயா்ந்து, ரூ.1.36 லட்சம் கோடியும், இறக்குமதி மீதான வரி வருவாய் 15.6 ச தவீதம் உயா்ந்து ரூ.52,492 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. திருப்பியளிக்கப்பட்டஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 40.1 சதவீதம் அதிகம்.

‘செப்.1 முதல் 21 வரையிலான தேவை மந்தநிலையும், செப்.22-இல் இருந்து நுகா்வு அதிகரிப்பும் ஒன்றையொன்று சமநிலை செய்துள்ளன. செப்டம்பா் வசூலுடன் சோ்த்து, நடப்பு நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.2 லட்சம் கோடிக்கு சற்றே குறைவாக உள்ளது. கடந்த நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாயை (ரூ.1.8 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்’ என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு ஏப்ரலில் கிடைக்கப் பெற்ற ரூ.2.10 லட்சம் கோடி, இரண்டாவது அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Gross GST collection rose 9.1 per cent to over Rs 1.89 lakh crore in September on the back of increased sales due to rate rationalisation, as per government data released on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.